×

விருதுநகர் மாவட்டத்தில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மனைவிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மனைவிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுந்தரமூர்த்திக்கும், ஈஸ்வரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஈஸ்வரன், சுந்தரமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இரவில் சுந்தரமூர்த்தியின் வீட்டுக்குள் குடிபோதையில் நுழைந்த ஈஸ்வரன் தமது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து, சுந்தரமூர்த்தியின் தலை, கழுத்து, மார்பு ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுந்தரமூர்த்தி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஈஸ்வரனையும் கைது செய்துள்ளனர். மேலும் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Virudhunagar district ,Tirur , disputes,over water,Virudhunagar district,murdered
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...